* முகச்சுருக்கத்தை
போக்க தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக்
குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும்
இருக்கும்.
* ஒரேஞ்சு பழத்தை இரண்டாக
வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து
சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில்
உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி அடிக்கடி
எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும்.
தினமும் இவ்வாறு செய்வதால் முடி
வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
* வேப்பிலை,
புதினா, சிறிது மருதாணி மற்றும்
குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி
வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து,
பாலில் குலைத்து, முகத்தில் பூசி 20 நிமிடம் ஊற
வைத்து குளித்தால், முகம் வேர்க்குரு வராமல்,
வெளியில் கருத்துப் போகாமல் இருக்கும்.
* இரவு
படுக்கும் முன், புதினா சாறு
இரண்டு தேக்கரண்டி அரை மூடி எலுமிச்சம்பழம்
சாறு ஆகியவற்றுடன் பயற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில்
தடவிக் கொண்டு பத்து நிமிடம்
ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம்
கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால்
ஏற்படும் தழும்பும் மறையும்.
* அப்பிள்
பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக
வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை
குறையும்.
* முகத்தில்
உள்ள முடிகளை அகற்ற முட்டையின்
வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைப்போல் ஆனதும்
* தோல்
நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக
மசித்து, அதனுடன் சிறிது தேன்,
ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து,
அந்த கலவையை முகத்தில் பூசி
சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு,
முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம்
காணாமல் போய்விடும்.
மூக்கு
கண் மற்றும் கருப்பா இருக்கு
என்ன செய்யலாம்?
* நன்கு
காய்ந்த ஆரஞ்சுப் பழத்தோல் நன்கு பொடித்து அதனுடன்
சிறிது பால் சேர்த்து முகத்திற்கு
பூசலாம் மேலும் பழங்களான ஃபேஸ்
பாக் போடலாம்.வாழைப்பழத்தின் தோலின்
உட்பகுதியை முகம் முழுவதும் தேய்த்து
காயவைத்து கழுவலாம். மேலும் எலுமிச்சை வெள்ளரிக்காய்
போன்ற காயிலும் இதே முறையை பின்பற்றலாம்.
முகப்பொலிவிற்கு
* உலர்ந்த
ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும்
அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம்
பொலிவு பெறும்.
* முகத்தில்
உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி
எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும்.
தினமும் இவ்வாறு செய்வதால் முடி
வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
* முகத்தில்
உள்ள முடிகளை அகற்ற, முட்டையின்
வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும்
முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால்
முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
* பால்,
கடலை மாவு, மஞ்சள், சந்தனம்,
அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி
குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும்
மாறும்.
* தக்காளி
பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில்
தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை
குறையும்.
* மோரை
முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து
முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப்
பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை
நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால்,
சருமம் மிகவும் மிருதுவாகும்.
* ஆரஞ்சு
பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில்
தேய்த்து, பத்து நிமிடம் கழித்து
சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தினம் இவ்வாறு செய்து வந்தால்
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* ஒவ்வொருவருக்கும்
2 வகையான சருமம் உள்ளது. ஒன்று
உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய்
வடியும் சருமம். எல்லா
வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில்
இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை
நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன்
தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி
பின் குளிர்ந்த நீரில் கழுவி விட
வேண்டும். இதே போல் எண்ணை
வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து
மூலிகை கலந்த பவுடரை வாங்கி
பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம்
புத்தொளிபெறும்.
உதடு உலர்ந்து விட்டதா?
* உதட்டில்
வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு
கறுத்து விடும் இதற்கு காரணம்
உடலில் உஷ்ணம் இருப்பதுதான். இதைப்
போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து
காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில்
அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும்.
இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை
விழுங்கிவிடவும்.
இப்படிச் செய்து வந்தால் உதடு
பழைய பொலிவுக்கு வந்து விடும்.
கண்ணில்
கருவளையம் மறைய...
* சில பெண்களுக்கு கண்களைச் சுற்றிகருப்பு வளையம் இருக்கும். இதை
நீக்க வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும்
நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும். பிறகு துணியை பன்னீரில்
நனைத்து கண்ணின் மீது வைத்து
படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு
5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல்
போய்விடும்.
காது அழகை பராமரிப்பது எப்படி?
* உங்களது
காது மடல்கள் மீது பேபிலோஷன்
தடவவும், 15 நிமிடம் கழித்து காதுகளை
அழுத்தமாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து
வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகிவிடும்.
முகத்திற்கு பூசும் பேஸ்- பேக்குகளை
காதுகளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாக
தெரியாது