வியாழன், 26 செப்டம்பர், 2013

ஒரு தாயின் மகள் புராணம் இதோ!!

  

ஒரு தாயின் மகள் புராணம் இதோ!!


                நிலா இல்லாத இரவுகளில் நீ சாப்பிட அடம்பிடிக்கையில்,

                நிலாவுக்கு உடம்பு சரியில்லை,நாளைக்கு வந்துடும்
                இப்போ நீ சாப்பிடு என நான் சொல்லி  சாமாளிக்க...
                அச்சச்சோ எனக்கு உடம்பு சரியில்லைனா
                நீ ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போவ,
                நிலாவை யாரும்மா கூப்பிட்டு போவா?
                என நீ கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரியாமல்
                விழிக்கையில் என் தாய்மை இன்னும் அழகாகிறதடி!!

                        

                                                                  ******
                என் கவலைகள் தீர்க்கும் உன் கன்னக்குழி சிரிப்பிற்கு
                இன்னும் எத்தனை முறையானாலும்
                பிரசவ'வலி'யை தாங்கலமடி என் செல்லமே!!

                                                                  ******

                மகளாய் நீ பிறந்தபின்பு கோவிலுக்கு செல்வதை
                வெகுவாய் குறைத்துவிட்டேன்...
                வீட்டிலேயே தெய்வமாய் நீ இருக்க...
                கோவில் சென்று நான் யாரை கும்பிட??

                                                                 ******

                உன் அழகை பார்த்து யாரும் கண்வைத்து விடகூடாதென
                கன்னத்தில் 'மை' வைத்தால் அது இன்னும்
                உன்னை அழகாய் காட்டுகிறது என்ன செய்ய??

                                                                ******

                மறு ஜென்மத்திலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை..
                அதனால்,என் செல்லமகளே
                இப்போதே காட்டிவிடுகிறேன்..
                உனக்கான அன்பு அத்தனையும் மொத்தமாய்!!

                                                                ******

               அம்மாவிடம் சண்டைபோட்டுவிட்டு
               அப்பாவிடம் சரணடையும் வித்தையெல்லாம்...
               யார் சொல்லி கொடுத்தாரடி உனக்கு??

                                                                ******

               பக்கத்து வீட்டு பிள்ளைகளிடம்  நீ சிறுசண்டை போடுகையில்..
               ஏண்டி இப்படி சண்டைகாரியா இருக்க என
               நான் செல்லமாய் கோவிக்கையில்..
               உன் மக உன்னை மாறித்தானே ம்மா இருப்பேன்..
               என இடுப்பில் கைவைத்து,தலை சாய்த்து நீ சொல்கையில்..
               ஒரே நிமிடத்தில் இந்தபிரபஞ்சமே
               சொர்க்கமாய் மாறுகிறது என் செல்லமே!!

                                                                ******
               உன்மீதான என் எல்லா கோபங்களையும்..

                             'பசிக்கிதும்மா' என்ற ஒற்றை வார்த்தையில்
               கரைத்துவிடும் கள்ளி நீ!!

                                                               ******
              உன்னால் நான் தெரிந்துகொண்டேன்..

              தேவதைகள் வானில் பறப்பதில்லை!!
              அவர்கள் மண்ணில் பிறக்கிறார்கள்
              குழந்தை வடிவமாய் என!!!

                                                              ******

             இந்த காலத்தை விட பெரிய எதிரி எனக்கு வேறேதுமில்லை..
             பின்னே குழந்தையாய் என் மடியில் தவழ்ந்த உனக்கு..
             இன்று நீயொரு குழந்தையை சுமக்கும் வயதாகிறதே!!

                                                              ******

             போதுமடி மகளே,நீஎனக்கு கொடுத்த வரங்கள் யாவும்...
             என் ஆசையெல்லாம் நான் இந்த உலகில்
             கண் மூடுகையில் காணும் கடைசிமுகம்
             உனதாய் இருக்கவேண்டும்..அதைவிட வேறென்ன
             இருந்துவிட போகிறது,என் வாழ்க்கை முழுமைப்பெற?!!

திங்கள், 23 செப்டம்பர், 2013

தின பலன் (Daily Prediction)

மேஷம் :
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த 
                   சலுகைகள் தாமதமாக கிடைக்கும். 
                    அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்


ரிஷபம் :
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாகும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள்.                           

                    அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா


மிதுனம் :
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் 
                   கிடைக்கும். 
                   அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, பிங்க்

கடகம் :
இன்றைய தினம் பணப்பற்றாக்குறை நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும். அரசால் ஆதாயம் உண்டு. யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் 
                   மேலதிகாரி ஒத்துழைப்பார். 
                   அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், வெளிர் நீலம்


சிம்மம் :
நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலைக் காணப்படும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். 
பேச்சில் முதிர்ச்சி தெரியும். மனக்குழப்பங்கள் விலகும். 
                    அதிர்ஷ்ட எண் : 2  அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு


கன்னி :
சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். 
                   உத்தியோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். 
                    அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை


துலாம் :
இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளை களின் உடல் நிலை சீராக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள்ஸ் சென்று வருவீர்கள். பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர்கள். வாகனச்செலவுகள் நீங்கும். 
                   பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். 
                   அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா


விருச்சிகம் :
திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டாரம் விரியும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். 
வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். 
                    அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்


தனுசு :
இன்றைய தினம் கையில் காசுபணம் புரளும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். உடன்பிறந்தவர் களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபார ரீதியாக சிலரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். அடிக்கடி செலவு 
                    வைத்த வாகனம் இனி சீராகும். பெற்றோரின் ஆதரவு கிட்டும். 
                    அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்


மகரம் :
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குடும்பாத்தாருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். தாயின் உடல்நிலைசீராக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். அம்மாவின் உடல்நிலை சீராகும். மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் 
                    மத்தியில் மதிக்கப் படுவீர்கள். 
                    அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்


கும்பம் :
முகப்பொழிவுடன் காணப்படுவீர்கள். முடியாமல் போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டறிவீர்கள். பேச்சில் 
                    கம்பீரம் பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். 
                    அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே


மீனம் :
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம்  
அனுசரித்துப்போவிர்கள். புதிய எண்ணங்கள் மனதில் தோன்றும். 
                    அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை

சனி, 21 செப்டம்பர், 2013

திருமண / கல்யாண வாழ்த்து கவிதைகள் - Tamil Wedding / Marriage Wishes

திருமண / கல்யாண வாழ்த்து கவிதைகள்



திருமண வாழ்த்து கவிதை : 1

உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
என்றும் அன்புடன் வாழ்த்தும்

திருமண வாழ்த்து கவிதை : 2

வாழ்த்துக்கள் சொல்லவார்த்தைகள் தேடிவாசல்வரை வந்துநின்றேன்!நீங்கள்காதல் பேசிகவிகள் பேசிவார்த்தைகள் யாவற்றையும்வசமாக்கி விட்டீரோ?வார்த்தைப்பஞ்சத்திலே நான்!நீவீரோ மஞ்சத்திலே!வாழ்த்துக்கள் உங்களுக்கு!வாழ்க பல்லாண்டு!நிலாவின் கைப்பற்றிநிறைவிழா காணும்மணமகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்

தமிழன்னை மடியில்தவழ்ந்த மைந்தனைதன்மடி தாங்கும்தமிழன்னை மடியில்தவழ்ந்த மைந்தனைதன்மடி தாங்கும்மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தி

வாழ்க்கை என்பதுவளைவுகள் நிரம்பியவசந்தப்பாதை!இன்பமும் இனிதே நிறைந்தது!இன்பத்திவாழ்க்கை என்பதுவளைவுகள் நிரம்பியவசந்தப்பாதை!இன்பமும் இனிதே நிறைந்தது!இன்பத்தில் இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமர
வீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள 

தென்றலின் சாமரவீச்சில்திங்களின் ஒளி ஒத்தடத்தில்மங்கள தென்றலின் சாமரவீச்சில்திங்களின் ஒளி ஒத்தடத்தில்மங்கள நாளில் மணமக்கள் மகிழ்வுடன் வாழ்க!

திருமண வாழ்த்து கவிதை : 3


ஆன்றோர் வாழ்த்துரைக்கஆயிரமாய் பூச்சொரியமங்கை திருமகளாய்மணவறையில் காத்திருக்கநாதசுர மேளங்கள்நல்லதொரு வாழ்த்திசைக்கநங்கை திருக்கழுத்தில்நம்பி அவன் நாண்பூட்டகட்டியவன் கட்டழகைகடைக்கண்கள் அளவெடுக்கமெட்டியவன் பூட்டிவிடமெல்லியலாள் முகம் சிவக்கஇவள் பாதியிவன் பாதிஎன்றிணைந்திட்ட மணவாழ்வில்இல்லறத்தின் இலக்கணமாய்இரு மனமும் வாழியவே!திருமணத்தின் இன்பங்கள்திகட்டாது தொடர்ந்து வரஓருயிராய் ஆருயிராய்மணமக்கள் வாழியவே!



திருமண வாழ்த்து கவிதை : 4


வாழ்த்துக்கள் உறவுகளே!வாழ்த்துக்கள் உங்களிற்கு!வாழ்த்துக்கள் உறவுகளே!வாழ்த்துக்கள் எங்களது!உள்ளம் இணைந்த இல்லம் என்றும் இனிக்கும் வெல்லம்!வானும் நிலவும் போல!இணைந்து வாழ வேண்டும்!காலச்சுழற்சி கொள்ளும் நிலவுவானுள் கரைந்தும் வளரும்!இன்பம் மட்டும் கூட்டி!இதய இராகம் மீட்டி! எந்தநிலையின் போதும் மாறாஅன்பை மட்டும் ஊட்டி!வாழ வேண்டும் நீங்கள்வாழ்த்துகின்றோம் நாங்கள்!தமிழும் சுவையும் போல!கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!எத்தனை இன்பம் இந்த நிமிடத்திலே!கொட்டும் மழையும் பூவாய் பொழியஅத்தனை தேவர்களும் ஒருங்கே வாழ்த்தஉங்கள் திருமண வாழ்க்கைமகிழ்வாய் அமைய வாழ்த்துகிறோம்!
 





திருமண வாழ்த்து கவிதை : 5



சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையனசமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழிநெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழிகுறையொன்றுமில்லை மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம் 
வரையாத ஓவியம் வரையாத ஓவியம் இருக்குது பார் உன் இடம்சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும் உன்மனம்மணமகளின் சொத்தென சொல்வதிந்த திருமணம்வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுபாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்என்றும் அழியாது உம் நற்புகழ்!இங்கனம்- நட்புகள்

திருமண வாழ்த்து கவிதை : 6

மலர்களில்மாலை கட்டும் வித்தையை உன்கண்களுக்குச் சொல்லி வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை மலர்களாக்கிமாலைசூடி அணிந்துகொண்ட தென்றுவாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திடதேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்